தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் - 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்ககளின் துணைப் பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் உள்ளிட்ட 139 காலிப் பணி இடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இந்த தேர்வில் பங்கேற்க வரும் சனவரி 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
தேர்வு நடைபெறும் நாள் : மார்ச் 3, 2019
ஊதியம் : ரூ.56,100 - ரூ.1,77,500
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in என்ற இணைதளத்தை அனுகலாம்

Post a Comment