தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்றும், எந்த 2 மணி நேரம் என்பதை அரசு முடிவு செய்து கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தும் சிறு முதலாளிகளும், அதில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர்.
இதனை பெரும்பாலான மக்கள் வரவேற்றனர். அதனால் மாசு குறையும் என்பது உண்மை தான். ஆனால், அந்த உத்தரவை வரவேற்றவர்கள் தற்போது போகி அன்று பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி மாசு ஏற்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து தமிழ் மகன் என்ற நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் ரத்தினச்சுருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Post a Comment