கர்நாடக மாநிலம் மாதாபுராவில் இந்து அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பேசிய பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் இந்து பெண்கள் மீது கை வைப்பவர்களின் கைகளை வெட்டுங்கள் என்று பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்து பெண்களின் உடல் மீது யாராவது கை வைத்தால் அவர்களின் கைகளை உடலில் ஒட்டியிருக்காத நிலையில் வெட்டி விடுங்கள். துரோகிகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் அவர்களை மண்ணோடு மண்ணாக்குங்கள் என்றும் அனந்தகுமார் கட்டளையிட்டார். அனந்தகுமாரின் இந்த பேச்சு வைரலானதால் அவருக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அனந்தகுமாரின் இந்த சர்ச்சைக்குறிய பேச்சிற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி. உக்ரப்பா, அனந்தகுமாரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக கர்நாடக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் மதுசூதணன் கூறியதாவது அனந்தகுமாரின் பேச்சு முற்றிலும் தவறானது, அவரின் பேச்சை ஒருபோதும் பாஜக நியாயப்படுத்தாது என்றார்.
இந்து பெண்களின் உடல் மீது யாராவது கை வைத்தால் அவர்களின் கைகளை உடலில் ஒட்டியிருக்காத நிலையில் வெட்டி விடுங்கள். துரோகிகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் அவர்களை மண்ணோடு மண்ணாக்குங்கள் என்றும் அனந்தகுமார் கட்டளையிட்டார். அனந்தகுமாரின் இந்த பேச்சு வைரலானதால் அவருக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அனந்தகுமாரின் இந்த சர்ச்சைக்குறிய பேச்சிற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி. உக்ரப்பா, அனந்தகுமாரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக கர்நாடக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் மதுசூதணன் கூறியதாவது அனந்தகுமாரின் பேச்சு முற்றிலும் தவறானது, அவரின் பேச்சை ஒருபோதும் பாஜக நியாயப்படுத்தாது என்றார்.

Post a Comment