சென்னையை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநரான மணிகண்டன் கடந்த 25-ஆம் தேதி, மறைமலை நகரில் ரயில் முன் பாய்ந்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார். ரயில் ஏறியதால் மணிகண்டனின் தலையும், உடலும் துண்டானது. இது குறித்து விசாரணை நடத்த சென்னை இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், சென்னை காவல்துறையினருக்கு எதிராக மனிகண்டன் அளித்திருந்த மரண வாக்குமூலம் சமூக வலைதளங்களில் இப்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண் பயணியை காரில் ஏற்றிக்கொண்டு சென்ற போது, நடுவே இன்னொரு பயணியை ஏற்றுவதற்காக காரை சாலையோரமாக நிறுத்தியுள்ளார். அப்போது, காவல்துறை அதிகாரி ஒருவர், தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தாம் தற்கொலை செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார் மணிகண்டன்.

Post a Comment