ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு உபயோகித்திருந்தால் அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக ஒதுக்கப்பட்ட நிலங்களை கண்டறிய அதிகாரிகளுக்கு 8 வாரங்களில் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.ஒதுக்கீடு பெற்றவர்களின் வாழ்க்கைதரம் உயர்ந்து விட்டால் அந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக வருவாய் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்துவதை விடுத்து, இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை மீட்டு பயன்படுத்தவும் உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

Post a Comment