சொந்த கட்சியையே விமர்சித்த காங்கிரஸ் ஜோதிமணியின் துணிச்சல்

உயர்சாதியினருக்கு பொருளாதாரஅடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ்கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது நூற்றாண்டுகால ஒடுக்குமுறையைக் கருத்தில் கொண்டு சாதிய அடிப்படையில் மட்டும்  இடஒதுக்கீட்டை ஆதரிக்கும்  அரசியல்சாசனத்திற்கு முரணானது.

இம்முயற்சி  இட ஒதுக்கீட்டுக்  கொள்கையை காலப்போக்கில் நீர்த்துப்போகச் செய்யும் ஆபத்துள்ளது.வருடத்திற்கு 8லட்சம் வருமானமுள்ளவர்களை ஏழைகளென வரையறுப்பது ஏற்புடையதல்ல. எந்த புள்ளிவிபரத்தின் அடிப்படையில் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது?

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏற்கனவே பொருளாதார அடிப்படியிலான 10% இடஒதுக்கீடு செல்லாது எனத் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்த மசோதா எப்படி நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறமுடியும்?

-ஜோதிமணி, காங்கிரஸ் நிர்வாகி

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget