குஜராத்தில் நடந்த உலக அளவிலான 9-வது நூற்பாலை மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய நூற்பாலைத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, மோடி பிரதமரான பிறகு குஜராத்தில் நூற்பாலை மற்றும் ஆடையக தயாரிப்பு வளர்ந்துள்ளதாகவும் இதனால் 30 ஆயிரம் கோடி அளவில் முதலீடு கிடைத்துள்ளதாகவும் பேசினார்.
அதே நிகழ்வில் அவர், நூற்பாலைத் துறை முதலீடுகள் தொடர்பான அறிக்கையையும் வெளியிட்டார். அந்த அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் நூற்பாலைத் துறை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் ஸ்மிருதி இராணியின் பேச்சுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் வேறுபட்டிருந்ததால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொழிலதிபர்கள் குழப்பமடைந்தனர்.

Post a Comment