இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 49வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ராஸ் டெய்லர் 93 ரன்களை குவித்தார். இந்திய வீரர் முகமது ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், சாஹல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இந்தியா 43 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 245 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரோகித் சர்மா 62 ரன்களும், ஷிகர் தவான் 28 ரன்களும், விராட் கோலி 60 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அம்பாதி ராயுடு 40 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சிறப்பாக பந்து வீசிய முகம்மது சமி ஆட்ட நாயகன் விருது பெற்றார். முதல் ஒரு நாள் போட்டியிலும் முகம்மது சமிதான் ஆட்ட நாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment