தமிழக வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் காலை 11 மணிக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், சென்னையில் வாக்காளர் பட்டியல் விவரத்தை பகல் 12 மணிக்கு தேர்தல் அதிகாரி வெளியிடுவார் என்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதில் தமிழகத்தில் மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் குறித்து ஏற்கனவே ஆலோசனை நடந்த நிலையில் இன்று இரண்டாவது கட்ட ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் மாலிக் பரோஸ்கான், மக்களவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்துவிட்டதாக தகவல் அளித்துள்ளார்.
மக்களவை தேர்தலுடன் மாநில சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், தலைமை தேர்தல் ஆணையம் கூறினால் இரண்டையும் சேர்த்து நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என்றும், மக்கள் தங்கள் பெயர்களை இந்த பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதில் தமிழகத்தில் மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் குறித்து ஏற்கனவே ஆலோசனை நடந்த நிலையில் இன்று இரண்டாவது கட்ட ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் மாலிக் பரோஸ்கான், மக்களவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்துவிட்டதாக தகவல் அளித்துள்ளார்.
மக்களவை தேர்தலுடன் மாநில சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், தலைமை தேர்தல் ஆணையம் கூறினால் இரண்டையும் சேர்த்து நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என்றும், மக்கள் தங்கள் பெயர்களை இந்த பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

Post a Comment