ஆசிரியர்களுக்கு வழங்க இருந்த சம்பளம் நிறுத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை

போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் அவர்களின் பட்டியலை தயாரித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

9 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்று பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்களை காலிப்பணியிடம் என அறிவிக்கப்பட்டு அதில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் எனவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே எச்சரித்தது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் இன்று இரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இந்நிலையில் வரும் 30ஆம் தேதி ஆசிரியர்களுக்கு வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. போராடிய நாட்களுக்கு சம்பளம் இல்லை. மேலும் சனி, ஞாயிற்று கிழமையும் சம்பளம் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget