4 நாட்களாக நாசுக்காக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை!


இந்தியாவில் நாள் தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த மாதங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொடும் என கணிக்கும் அளவுக்கு உயர்வை சந்தித்தது. இதனை தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்ற சமயத்தில் பெட்ரோல் விலை சரிவடைய தொடங்கியது.
 இந்நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை மறைமுகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திய நிலையில், இன்று 4-வது நாளாக உயர்த்தியுள்ளன. சென்னையில் நேற்றைய விலையைக் காட்டிலும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.53 காசுகள் உயர்ந்து ரூ.72.40க்கும், டீசல் ரூ.64 காசுகள் உயர்ந்து ரூ.67.26க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவுதி அரேபியா தனது தினசரி உற்பத்தியை 8 லட்சம் பேரல்கள் குறைக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget