காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள் அனைவருக்கும் சம்பளம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகள் வறுமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது புதிய இந்தியாவை உருவாக்க முடியாது என்றார். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால், குறைந்தபட்ச வருமானத்தை அனைத்தும் ஏழைகளுக்கும் உறுதி செய்வோம் என அவர் தெரிவித்தார். இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழை மக்களும் சராசரி வருமானத்தை பெறுவார்கள் என கூறிய அவர், இதனால் நாட்டில் பசி, வறுமை ஒழியும் என்றார். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த திட்டத்தை நிறைவேற்றப்போவதாக அவர் உறுதியளித்தார். பல்வேறு வளர்ந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள இந்த திட்டம் இந்தியாவில் கொண்டு வரப்பட்டால், விவசாயிகள், வேலையில்லா பட்டதாரிகள் அதிகம் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment