மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர் மோடி ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி  தமிழகம் வைக்கிறார்.

கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியது:

தமிழ்நாடு முன்னேறுவதற்காக பிரதமர் மோடி ஆட்சியில் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரையில் மத்திய அரசு நிதியில் இருந்து பல கோடி ரூபாய் செலவில் இரண்டு நாட்களுக்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட இடங்களில் கூட பல்நோக்கு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகிற திருப்பூருக்கு 10ஆம் தேதியும், கன்னியாகுமரிக்கு 19ஆம் தேதியும் வருகைத்தர உள்ளார். அவரின் வருகையின் போது பல வகையான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான விழா நடைபெறுவதற்க்குரிய இடத்தையும் நாங்கள் தேர்வு செய்ய உள்ளோம்.

மேலும் கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்களை மோடி செயல்படுத்த உள்ளார். அத்திட்டங்களை தொடங்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் விழா நடத்தப்படம் என அவர் கூறினார்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget