போலந்து நாட்டை சேர்ந்த மேயரை நிகழ்ச்சி மேடையிலேயே இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து நாட்டில் தனியார் அறக்கட்டளை நடத்திய இசை நிகழ்ச்சியில் மேயர் பாவேவூ அடமோவிட்ச் கலந்துகொண்டார். மேடையில் நின்றுகொண்டிருந்த அவரை அங்கு வந்த இளைஞர் தான் வைத்திருந்த கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த மேயரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கத்தியால் குத்திய ஸ்டெஃபான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Post a Comment