அரசு அறிவித்த பிளாஸ்டிக் தடையால் தற்போது தமிழ் நாடு முழுவதும் 11 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாக புதுக்கோட்டை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் முத்துமாணிக்கம் , கடந்த ஆண்டு ஜீன் மாதம் அரசால் கிரீன் கேட்டகிரி என்று முத்திரையிடப்பட்ட சுற்றுசூழலுக்கு கேடில்லாத பிளாஸ்டிக் என அனுமதிக்கப்பட்ட பிளாஸ்டிக்குக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.மேலும் ஆறு மாதத்திற்கு முன்னால் அரசால் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குக்கும் தற்போது தடை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார் ,மேலும் பிளாஸ்டிக் உற்பத்திக்காக பல கோடி ரூபாய் வங்கியில் கடன் வாங்கியுள்ள நிலையில் தற்போதைய தடை உத்தரவு எங்களின் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment