ஹரியானா மாநிலம் ஜிந்த் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த 28ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.இதனையடுத்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.
ஜிந்த் தொகுதியில் பாஜக சார்பில் கிருஷ்ணா மித்தா, காங்கிரஸ் சார்பில் ரந்தீப் சர்ஜேவாலா மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சி சார்பில் திக்விஜய் சவுத்தாலா ஆகியோர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தின் கீழுள்ள ராம்கர்-ல் காங்கிரஸ் சார்பில் சாபியா ஜுபைர் கான், பாஜக சார்பில் சுக்வந்த் சிங் ஆகியோர்களுக்கிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் மகன் ஜகத் சிங் இங்கு போட்டியிடுகிறார்.
இதில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கிய முதல், ஜிந்த் சட்டசபை இடைத் தேர்தலில் ஜனநாயக் ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது. திக்விஜய் சவுத்தாலா பாஜக வேட்பாளரை விட 1338 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார்.
இதனை தொடர்ந்து 3வது சுற்று இறுதியில், திக்விஜய் சவுத்தாலா, 11226 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாபளர் 9350 வாக்குகள், காங்கிரஸ் வேட்பாளர் 5813 வாக்குகள் பெற்றுள்ளனர்.
ராம்கார் சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. 16வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சாபியா ஜுபைர் கான் 63,906 வாக்குகள் பெற்று மேலும் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் சுக்வந்த் சிங் 47,254 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Post a Comment