ரபேல் - பாஜகவுக்கு செக் வைக்கும் காங்கிரஸ்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும், கோவா முதலமைச்சருமான மனோகர் பாரிக்கரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோவாவில் தனிப்பட்ட முறையில் தனது தாயார் சோனியா காந்தியுடன் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கணையம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரை இன்று தலைமை செயலகத்தில் ராகுல்காந்தி சந்தித்து பேசினார். 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் அவரது உடல் நலம் பற்றி ராகுல் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் ரஃபேல் மோசடி தொடர்பான ரகசியங்கள் முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரிடம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget