
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த லூலூ குழும தலைவர் யூசுப் அலி, உலகெங்கும்
158 ஹைபர்மால்களை நடத்தி வருகிறார். இவர் தனது சொந்த ஊரான திரிபிரயாரில்
250 கோடி ரூபாய் செலவில் Y மால் என்ற பெயரில் புதிய ஹைபர்மாலை
கட்டியுள்ளார்.

இதனை திறந்துவைத்து பேசிய யூசுப் அலி, இந்த மால் மூலம்
கிடைக்கும் அனைத்து லாபமும் ஊர் மக்களின் வளர்ச்சிக்காக வழங்கப்படும்
என்றார். முதல் கட்டமாக அந்த ஊரில் உள்ள மசூதி, கோயில் மற்றும்
தேவாலயத்துக்கு நிதி வழங்கப்படும் என கூறிய அவர், இந்த மாலில் உள்ளூரை
சேர்ந்த 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Post a Comment