குன்னூரில் அரிய வகை மலபார் அணில் பழக்கடைக்கு வந்து, வியாபாரிகளின் கைகளில் பழங்களை வாங்கி உட்கொண்டு வருவது சுற்றுலா பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அடர்ந்த வனப்பகுதிகளில், மட்டும் இந்த மலபார் அணில்கள் காணப்படுகின்றன. குன்னூர் சிம்ஸ்பூங்காவில் உள்ள நசீமாபேகம் என்பவரின் சாலையோர கடையில், வைக்கப்பட்டுள்ள சீத்தா பழம், அவக்கோடா உட்பட அரிய வகை பழங்களை மட்டுமே உட்கொள்ள இந்த மலபார் அணில் தினமும் வந்து செல்கிறது. இந்த பழங்களை கைகளிலேயே கொடுத்தால் அதனை அரவணைப்புடன் வாங்கி உட்கொண்டு வருவது சுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

Post a Comment