சமூக வலைத்தங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலியை உபயோகிக்காதவர்கள் அரிதே. இதன் வரிசையில் டிக் டாக் செயலியும் கூட. டிக் டாக்-ஐ உபயோகிப்பவர்கள் பலர் பிரமலமாக வேண்டுமென பெண்கள் ஆபாசமான முறையில் ஆடை அணிந்தும் ஆண்கள் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தங்களது வீடியோவை பதிவிடுகிறார்கள். இதை பல சிறுவர்கள் பார்க்கக்கூடியதாக இருப்பதால், அவர்களை பாதிப்படைய செய்யகின்றன.
இதற்கு TIK TOK செயலியை தடை செய்தால் மட்டுமே இளைஞர்களை வாழ்க்கையை காப்பாற்ற முடியும் என மனித நேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் தமீமும் அன்சாரி கேள்வியெழுப்பினார்.
தமிழக கலச்சாரத்தை சீரழித்து, ஆபாசத்துற்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும் டிக் டாக் ஆப்-ஐ, பளூ வேல் விளையாட்டை தடை செய்தது போல மத்திய அரசுடன் சேர்ந்து இந்த TIK TOK செயலியும் தடை செய்யப்படும் என்று சட்டபேரவையில் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
Post a Comment