Newsu

Latest Post

இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளின் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான். முதலாவதாக பாகிஸ்தான் சென்ற சல்மானுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதை தொட‌ர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்-யை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்ட பின், சவுதி இளவரசர் சல்மான், நேற்று இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பாகிஸ்தான் பயணத்தை முடிவிட்டு நேராக இந்தியா வர சவுதி இளவரசருக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தது. அதனால் இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி சென்றார். அதன்பிறகு நேற்று‌ இரவு இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது இந்தியா வந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை, மரபுகளை உடைத்து விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி வரவேற்றார். இளவரசரின் அரசு முறை பயணத்தில் ஒரு பகுதியான இந்த இந்திய பயணத்தில், இராணுவத்துறையில் முக்கியமாக சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வர்த்தக ரீதியான முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்பு என தெரிகிறது.

பாஜக - பாமக - அதிமுகவின் கூட்டணி, கல்லை கட்டி கிணற்றில் குதிப்பதற்கு சமம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அந்த கூட்டணி படுதோல்வி அடையும் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதிமுக, பாஜக மற்றும் பாமக கூட்டணியி இன்று முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார் . மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கவே எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன், அதிமுக கூட்டணி வைப்பதை தொண்டர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்றும், மேலும், இந்த கூட்டணி கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதிப்பதற்கு சமம் என்றும், அனைத்து தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும் என்றும் டிடிவி தினகரன் அவர் கூறினார்.

வேலூர் அருகே உள்ள ஆம்பூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: பணத்துக்காக இணைந்துள்ள கூட்டணிதான் அதிமுக - பாமக கூட்டணி. மக்களின் நலனுக்காக இல்லை, பணத்துக்காக சேர்துள்ள கூட்டணி. ஜெயலிலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வத்தை விமர்சித்தவர் ராமதாஸ். அதிமுகவின் கதை என்ற பெயரில் அரசை விமர்சித்து புத்தகம் வெளியிட்ட ராமதாஸ் அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளார். 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமல்லாமல் வேறு எதோகூட இதன் பின்னணியில் உள்ளது. 
மேலும் மக்களை பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக  கடுமையாக விமர்சனம் செய்தார் மு.க.ஸ்டாலின்.

கடந்த 2017 - 18 நிதியாண்டில் மத்திய அரசு ஆயிரத்து 157 கோடி ரூபாய் நிதியை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் செலவு செய்துள்ளது சிஏஜி அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தால் ஆண்டு தோறும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை மீறி நிதி தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு இந்த விதிகளை மீறியுள்ளது சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. 

மத்திய மாநில அரசுகளின் செலவு கணக்கை சரிபார்க்கும் சி.ஏ.ஜி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017 - 18 நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்ஜெட்டை விடமத்திய அரசு  கூடுதலாக ஆயிரத்து 157 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முறையான திட்டமிடல் இன்றி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக இந்த பிரச்சனை ஏற்படுவதாக பொதுக்கணக்குழு தெரிவித்துள்ளது.


அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதற்கான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 
அதில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் சிறு வியாபாரிகளுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் மளிகை கடை, மருந்து கடைகள் போன்ற கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் ரூ.1000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் உற்பத்தி, கொள்முதல், சேமித்தல், விற்பனை செய்யவது போன்ற நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் முதலாவது முறையாக ரூ. 25 ஆயிரமும், இரண்டாவது முறையாக ரூ. 50 ஆயிரமும், மூன்றாவது முறையாக ரூ. 1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். மேலும் 3 முறை அபராதம் விதித்த பிறகும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) என்ற அமைப்பு தமிழக உட்பட இந்தியா முழுவதும் இயங்கிவருகிறது. நாடு முழுவதும் மக்களுக்கு எதிராக மதவாத, பாசிச சக்திகளால் நடத்தப்படும் அநீதிகள், வன்முறைகளுக்கு எதிராக அந்த அமைப்பு போராடி வருகிறது. இந்த நிலையில், ஜார்கண்ட் மாநில பாஜக அரசு, PFI அமைப்புடன் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாராமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இந்திய குற்றவியல் சட்ட திருத்த விதி 1908இன் படி தடைவிதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

நியூசு பார்வை:
கடந்த 2018ஆம் ஆண்டும் இந்த அமைப்புக்கு அம்மாநில அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து , அந்த அமைப்பு தொடர்ந்த வழக்கில், தடைக்கு ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு கூறிய புகார்கள் ஆதாரப்பூர்வமாக இல்லை என கூறியுள்ள தடையை ரத்து செய்தது. இந்த நிலையில், PFI மீதான தடை ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
காந்தியின் கொலைக்கு காரணமான இரு முறை தடை ஆணை பெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் நிலையில் தற்போது உள்ளது. பசுவுக்காக எண்ணற்ற இஸ்லாமியர்கள், தலித்துகளை படுகொலை செய்த வி.எச்.பி, பஜ்ரங்தள் அமைப்புகள் எந்த தடையும் இன்றி மத்திய பாஜக அரசால் வளர்க்கப்பட்டு வருகிறது. அண்மையில் காந்தியின் பொம்மையை துப்பாக்கியால் சுட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி கோட்சேவின் பக்தர்களான இந்து மகா சபா அமைப்புக்கு தடை விதிக்கப்படவில்லை.
தமிழகத்தில் தங்கள் வீட்டில் குண்டுகளை வீசிக்கொண்டு மதக்கலவரத்தை தூண்டிய இந்து முன்னணி, பாஜக மீது தடை இல்லை.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாரில் காவல் அதிகாரியை படுகொலை செய்த இந்துத்துவ அமைப்புகள் இன்னும் சுதந்திரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. மாலேகான் குண்டு வெடிப்புக்கு காரணமான ஆர்.எஸ்.எஸின் மாணவர் இயக்கமான ஏபிவிபி என்ற தீவிரவாத அமைப்புக்கு இன்னும் தடை விதிக்கப்படவில்லை. 

 கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்ற பத்திரிகையாளர்களை படுகொலை செய்த சங்பரிவார பயங்கவாரிகள் இன்னும் சுதந்திரமாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொத்துக்கொத்தாக கொலை செய்து பெண்களின் கருப்பையில் இருந்த குழந்தையை உருவி தரை அடித்துக்கொன்று ரத்தவெறி ஆட்டம் ஆடிய பாஜக தான் இன்று இந்திய ஆட்சிப்பீடத்தில் அமர்ந்துள்ளது. அந்த படுகொலைகளுக்கு காரணமானவர் என கூறப்படும் மோடி தான் இன்று இந்திய பிரதமர். அதை களத்தில் செயல்படுத்திய அமித்ஷா இன்று பாஜகவின் தலைவர். இவர்களுக்கு எல்லாம் தடை விதிக்கப்படாத போது PFI அமைப்புக்கு மட்டும் தடை ஏன்? என்ற கேள்வி எழுகிறது.


காரணம், இஸ்லாமியர்களுக்கான பெரும்பாலான அமைப்புகள் மாநில அளவில் இயங்கி வந்த PFI தேசிய அளவில் நிறுவப்பட்டு பின் தங்கிய ஏழை இஸ்லாமியர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசால் குறி வைக்கப்படும் அப்பாவிகளுக்காக பல சட்ட போராட்டங்களை நடத்தி அவர்களை விடுவிக்க உதவி வருகிறது. அதே போல், இஸ்லாமியர்கள், தலித்துகளுக்கு எதிராக மேற்குறிப்பிட்ட மதவாத சக்திகள் நடத்தும் தாக்குதல்களை கண்டித்து பல போராட்டங்களை நடத்தி வருவதுடன், அவர்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்த உதவி வருகிறது. இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை. ஆனால், இது பாஜகவின் கொள்கையான மனுநீதி சாஸ்திரத்துக்கு எதிரானது. மனு நீதியின் படி ஆட்சி நடத்தும் பாஜக அதற்கு எதிராக செயல்படும் அமைப்புகளை விட்டுவைக்குமா? 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு தீவிரவாதி என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அமெரிக்க அரசாங்கம் தீவிரவாதிகளின் குழு என்றும்,  வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிக்கு அமெரிக்காவே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் உள்ள தீவிரவாதிகள் வெனிசுலாவில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த உறுதியேற்றுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தங்கள் நாட்டின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா சுரண்ட உள்ளது என்றார்.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget