சவுதி இளவரசரை மரபுகளை தாண்டி வரவேற்ற பிரதமர் மோடி
இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளின் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான். முதலாவதாக பாகிஸ்தான் சென்ற சல்மானுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்-யை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்ட பின், சவுதி இளவரசர் சல்மான், நேற்று இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பாகிஸ்தான் பயணத்தை முடிவிட்டு நேராக இந்தியா வர சவுதி இளவரசருக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தது. அதனால் இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி சென்றார். அதன்பிறகு நேற்று இரவு இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது இந்தியா வந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை, மரபுகளை உடைத்து விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி வரவேற்றார். இளவரசரின் அரசு முறை பயணத்தில் ஒரு பகுதியான இந்த இந்திய பயணத்தில், இராணுவத்துறையில் முக்கியமாக சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வர்த்தக ரீதியான முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்பு என தெரிகிறது.
பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்ட பின், சவுதி இளவரசர் சல்மான், நேற்று இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பாகிஸ்தான் பயணத்தை முடிவிட்டு நேராக இந்தியா வர சவுதி இளவரசருக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தது. அதனால் இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி சென்றார். அதன்பிறகு நேற்று இரவு இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது இந்தியா வந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை, மரபுகளை உடைத்து விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி வரவேற்றார். இளவரசரின் அரசு முறை பயணத்தில் ஒரு பகுதியான இந்த இந்திய பயணத்தில், இராணுவத்துறையில் முக்கியமாக சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வர்த்தக ரீதியான முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்பு என தெரிகிறது.