குக்கர் சின்னத்தை டிடிவி தினகரனுக்கு ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், இது குறித்து தேர்தல் ஆணையம் 4 வாரத்திற்குள் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கையும் 4 வாரத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என ஏற்கனவே தேர்தல் ஆணையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment