PFI அமைப்புக்கு தடை... வி.எச்.பி, இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸுக்கு சுதந்திரம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) என்ற அமைப்பு தமிழக உட்பட இந்தியா முழுவதும் இயங்கிவருகிறது. நாடு முழுவதும் மக்களுக்கு எதிராக மதவாத, பாசிச சக்திகளால் நடத்தப்படும் அநீதிகள், வன்முறைகளுக்கு எதிராக அந்த அமைப்பு போராடி வருகிறது. இந்த நிலையில், ஜார்கண்ட் மாநில பாஜக அரசு, PFI அமைப்புடன் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாராமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இந்திய குற்றவியல் சட்ட திருத்த விதி 1908இன் படி தடைவிதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

நியூசு பார்வை:
கடந்த 2018ஆம் ஆண்டும் இந்த அமைப்புக்கு அம்மாநில அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து , அந்த அமைப்பு தொடர்ந்த வழக்கில், தடைக்கு ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு கூறிய புகார்கள் ஆதாரப்பூர்வமாக இல்லை என கூறியுள்ள தடையை ரத்து செய்தது. இந்த நிலையில், PFI மீதான தடை ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
காந்தியின் கொலைக்கு காரணமான இரு முறை தடை ஆணை பெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் நிலையில் தற்போது உள்ளது. பசுவுக்காக எண்ணற்ற இஸ்லாமியர்கள், தலித்துகளை படுகொலை செய்த வி.எச்.பி, பஜ்ரங்தள் அமைப்புகள் எந்த தடையும் இன்றி மத்திய பாஜக அரசால் வளர்க்கப்பட்டு வருகிறது. அண்மையில் காந்தியின் பொம்மையை துப்பாக்கியால் சுட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி கோட்சேவின் பக்தர்களான இந்து மகா சபா அமைப்புக்கு தடை விதிக்கப்படவில்லை.
தமிழகத்தில் தங்கள் வீட்டில் குண்டுகளை வீசிக்கொண்டு மதக்கலவரத்தை தூண்டிய இந்து முன்னணி, பாஜக மீது தடை இல்லை.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாரில் காவல் அதிகாரியை படுகொலை செய்த இந்துத்துவ அமைப்புகள் இன்னும் சுதந்திரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. மாலேகான் குண்டு வெடிப்புக்கு காரணமான ஆர்.எஸ்.எஸின் மாணவர் இயக்கமான ஏபிவிபி என்ற தீவிரவாத அமைப்புக்கு இன்னும் தடை விதிக்கப்படவில்லை. 

 கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்ற பத்திரிகையாளர்களை படுகொலை செய்த சங்பரிவார பயங்கவாரிகள் இன்னும் சுதந்திரமாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொத்துக்கொத்தாக கொலை செய்து பெண்களின் கருப்பையில் இருந்த குழந்தையை உருவி தரை அடித்துக்கொன்று ரத்தவெறி ஆட்டம் ஆடிய பாஜக தான் இன்று இந்திய ஆட்சிப்பீடத்தில் அமர்ந்துள்ளது. அந்த படுகொலைகளுக்கு காரணமானவர் என கூறப்படும் மோடி தான் இன்று இந்திய பிரதமர். அதை களத்தில் செயல்படுத்திய அமித்ஷா இன்று பாஜகவின் தலைவர். இவர்களுக்கு எல்லாம் தடை விதிக்கப்படாத போது PFI அமைப்புக்கு மட்டும் தடை ஏன்? என்ற கேள்வி எழுகிறது.


காரணம், இஸ்லாமியர்களுக்கான பெரும்பாலான அமைப்புகள் மாநில அளவில் இயங்கி வந்த PFI தேசிய அளவில் நிறுவப்பட்டு பின் தங்கிய ஏழை இஸ்லாமியர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசால் குறி வைக்கப்படும் அப்பாவிகளுக்காக பல சட்ட போராட்டங்களை நடத்தி அவர்களை விடுவிக்க உதவி வருகிறது. அதே போல், இஸ்லாமியர்கள், தலித்துகளுக்கு எதிராக மேற்குறிப்பிட்ட மதவாத சக்திகள் நடத்தும் தாக்குதல்களை கண்டித்து பல போராட்டங்களை நடத்தி வருவதுடன், அவர்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்த உதவி வருகிறது. இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை. ஆனால், இது பாஜகவின் கொள்கையான மனுநீதி சாஸ்திரத்துக்கு எதிரானது. மனு நீதியின் படி ஆட்சி நடத்தும் பாஜக அதற்கு எதிராக செயல்படும் அமைப்புகளை விட்டுவைக்குமா? 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget