கழுத்தை பதம் பார்த்த பந்து! சுருண்டு விழுந்த கிரிக்கெட் வீரர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸ் வீசிய பந்து தலையை பதம்பார்த்ததில் இலங்கை வீரர் கருணா ரத்னே களத்திலேயே சுருண்டு விழுந்தார்.

ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேன்பராவில் நடைபெற்று வருகிறது. 2 வது நாளான இன்று இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கருணா ரத்னே மற்றும் திருமன்னே ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 31 வது ஓவரை வீசிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்சின் பந்து கருணா ரத்னே கழுத்தில் பலமாக தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர் நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்தார். களத்திற்குள் விரைந்து வந்த மருத்துவ குழுவினர் கருணா ரத்னேவை பரிசோதித்து விட்டு உடனடியாக  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதேபோல் கடந்த 2014 ஆம் ஆண்டு தலையில் பந்து தாக்கி ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூங்ஸ் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget