வாக்குப்பதிவு இயந்திர வழக்கு - உச்சநீதிமன்றம் உத்தரவு


தேர்தலுக்கு முன் தனியார் நிறுவனங்களை வைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் 6 வாரத்துக்குள் விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என்றும், தன்னிடம் சில கட்சிகள் முறைகேட்டில் ஈடுபட வலியுறுத்தியதாகவும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான சையத் சுஜா என்ற தொழில்நுட்ப வல்லுனர் அண்மையில் தெரிவித்திருந்தார். இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த இன்று 22 எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை முன்வைத்தனர். இந்த நிலையில், தேர்தலுக்கு முன் தனியார் நிறுவனங்களை வைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கப்படுவதற்கு எதிராக பத்திரிகையாளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இதுகுறித்து 6 வாரங்களில் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget