நாமக்கல் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த பிளஸ் 2 மாணவியின் உடலை பெற்றோர் யாருக்கும் தெரியாமல் எரித்த சம்பவம் சந்தேகத்தில் ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கலை அடுத்த தும்மகுறிச்சி மேலப்பட்டி தாசன் காடு பகுதியை சேர்ந்த சேகர், அங்காயி தம்பதியினரின் மகள் மல்லிகா, அங்குள்ள அரசு பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். கடந்த 31ம் தேதி அவர் இறந்து விட்டதாக கூறி, மல்லிகாவின் உடலை அவரது பெற்றோர் இரவோடு இரவாக சுடுகாட்டுக்கு கொண்டு சென்று எரித்துள்ளனர். யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் மாணவியின் உடல் எரிக்கப்பட்டதை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சாமூண்டீஸ்வரி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மரணத்தை மறைத்து உடலை எரித்ததோடு, அதற்கான ஆதாரங்களை அழித்தது தொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அணவக்கொலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது.
Post a Comment