சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார், செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டிவிட்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடிகர், இயக்குநர் ராம்தாஸ் அவர்களின் இல்ல திருமணவிழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அப்போது, சிவக்குமாருடன், ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். இதனையறிந்த சிவக்குமார், ரசிகரின் செல்போனை தட்டிவிட்டார். கடந்த ஆண்டு இதேபோல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார், ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Post a Comment