சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் கொண்டு வந்த சிறுத்தை புலிக்குட்டி பறிமுதல் செய்த சுங்கதுறை அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றன.
தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, காஜா மொய்தீன் என்ற பயணி கொண்டு வந்த சிறுத்தைப் புலிக்குட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த பயணியிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Post a Comment