மதுரை TVS நகரில் இன்று நகராட்சி பூங்காவை திறந்து வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு. அதனையடுத்து பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் உயிரோடு இருப்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்ட பிச்சை என்றும் திமுகவை போல வேஷம் போடுவது அதிமுக இல்லை. அதிகவினர், தமிழன் என்ற உணர்வோடு, உண்மையாக தமிழர்களுக்காக பாடுபடுகிறது.
ராஜிவ் காந்ட்கி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட ஏழு பேரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியது அதிமுக அரசு. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு காரணம் ஜெயலலிதா போட்ட பிச்சை. இவ்வாறு செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ள இந்த கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
Post a Comment