பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமர் கல்யாணராமனை சென்னை விமான நிலையத்தில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் கல்யாணராமன். இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருவதாக சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் பல புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று காலை அஹமதாபாத்திலிருந்து சென்னை திரும்பிய கல்யாணராமனை போலீசார் விமானநிலையத்தில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment