மதுரையில் நேற்று நிருபர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் உயிரோடு இருப்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்ட பிச்சை என்றும் திமுகவை போல வேஷம் போடுவது அதிமுக இல்லை என்றார். அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ள இந்த கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஏழு பேர் விடுதலை பிரச்னை பற்றி பேசாவிட்டால், வாக்கு கிடைக்காது என்ற நெருக்கடியால் தான் ஜெயலலிதா பேசியதாக கூறினார். செல்லூர் ராஜூ அமைச்சராக இருப்பது மக்கள் போட்ட பிச்சை என சீமான் தெரிவித்துள்ளார்.
Post a Comment