மத்திய அரசு விதிகளை மீறி ரூ.1,157 கோடி செலவு செய்தது அம்பலம்!

கடந்த 2017 - 18 நிதியாண்டில் மத்திய அரசு ஆயிரத்து 157 கோடி ரூபாய் நிதியை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் செலவு செய்துள்ளது சிஏஜி அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தால் ஆண்டு தோறும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை மீறி நிதி தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு இந்த விதிகளை மீறியுள்ளது சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. 

மத்திய மாநில அரசுகளின் செலவு கணக்கை சரிபார்க்கும் சி.ஏ.ஜி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017 - 18 நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்ஜெட்டை விடமத்திய அரசு  கூடுதலாக ஆயிரத்து 157 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முறையான திட்டமிடல் இன்றி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக இந்த பிரச்சனை ஏற்படுவதாக பொதுக்கணக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget