தமிழகத்தில் பல கட்சிகள் பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கின்றன. ஆனால், தமிழகத்தில் பாஜகவினர் நடத்தும் கூட்டங்களில் காலி சேர்கள் மட்டுமே கிடக்கும். இது குறித்து பேசும் பாஜகவினர், தாங்கள் பணம் கொடுத்து கூட்டம் சேர்ப்பவர்கள் இல்லை, கொள்கை அடிப்படையில் கூட்டம் சேர்க்கக்கூடியவர்கள் என சமாளிப்பார்கள். ஆனால் கடந்த 10ம் தேதி திருப்பூரில் நடந்த மோடி கூட்டத்துக்கு காசு கொடுத்து பாஜகவினர் கூட்டம் சேர்த்துள்ளனர். மதுரையில் நடந்த கூட்டத்தில் காலி சேர்கள் தென்பட்டதால் மோடி அப்செட் ஆனதாக கூறப்படுகிறது. எனவே, இம்முறை அந்த தவறு நடக்காமல் இருக்க கொள்கையை காலில் போட்டு நசுக்கிவிட்டு காசை பயன்படுத்தி இருக்கிறது பாஜக.
திருப்பூரில் பாஜக ஆதரவு பனியன் தொழிற்சாலைகளில் ஒரு நாள் சம்பளம்
தருவதாகச் சொல்லி தொழிற்சாலைகளின் பேருந்துகளிலேயே ஊழியர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். தலைக்கு ரூ.300 மற்றும் குவார்டர் சரக்கு, உணவு கொடுத்து பலரை அழைத்து சென்றுள்ளனர். இதேப கட்டுமான வேலை செய்யக் கூடிய தொழிலாளர்களை பாஜக வினர் பணம் கொடுத்து கூட்டத்துக்குக் அழைத்து சென்றுள்ளனர்.
அதே போன்று, மோடி கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் பலர் வடமாநிலத்தவர்களாக இருந்துள்ளனர். பணம் வாங்கிக்கொண்டு வந்த பலர் பொதுக்கூட்ட மைதானத்
திற்குள் வராமல் வெளியே சுற்றிக் கொண்டிருந்தனர். மோடியின் ஹெலிகாப்டர் வந்த போது அதை பார்ப்பதற்கு கூட்டம் அலை மோதியது. மோடி வருவதற்கு முன்பு வரை பாஜக மேடையில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள், வெளியே நிற்பவர்கள் உள்ளே வந்து அமருமாறு அழைத்துக் கொண்டே இருந்தனர்.
இதில் விவசாயிகள் திரண்டு வந்தது போல்
காட்டிக் கொள்ள நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பேர் பச்சை துண்டு, தலைப்பாகை வழங்கப்பட்டது. இத்தனை நகைச்சுவைகளுக்கு மத்தியில் மோடி சென்ற பிறகு பேசிய வானதி சீனிவாசன் இது காசு கொடுத்து குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் சேர்த்த கூட்டமல்ல என பேசிய போது கலைந்து சென்ற கூட்டம் ஒரு நொடி நின்று மேடையை திரும்பிப்பார்த்து அதிர்ச்சி கலந்த சிரிப்புடன் சென்றது.
திருப்பூரில் பாஜக ஆதரவு பனியன் தொழிற்சாலைகளில் ஒரு நாள் சம்பளம்
தருவதாகச் சொல்லி தொழிற்சாலைகளின் பேருந்துகளிலேயே ஊழியர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். தலைக்கு ரூ.300 மற்றும் குவார்டர் சரக்கு, உணவு கொடுத்து பலரை அழைத்து சென்றுள்ளனர். இதேப கட்டுமான வேலை செய்யக் கூடிய தொழிலாளர்களை பாஜக வினர் பணம் கொடுத்து கூட்டத்துக்குக் அழைத்து சென்றுள்ளனர்.
அதே போன்று, மோடி கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் பலர் வடமாநிலத்தவர்களாக இருந்துள்ளனர். பணம் வாங்கிக்கொண்டு வந்த பலர் பொதுக்கூட்ட மைதானத்
திற்குள் வராமல் வெளியே சுற்றிக் கொண்டிருந்தனர். மோடியின் ஹெலிகாப்டர் வந்த போது அதை பார்ப்பதற்கு கூட்டம் அலை மோதியது. மோடி வருவதற்கு முன்பு வரை பாஜக மேடையில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள், வெளியே நிற்பவர்கள் உள்ளே வந்து அமருமாறு அழைத்துக் கொண்டே இருந்தனர்.
இதில் விவசாயிகள் திரண்டு வந்தது போல்
காட்டிக் கொள்ள நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பேர் பச்சை துண்டு, தலைப்பாகை வழங்கப்பட்டது. இத்தனை நகைச்சுவைகளுக்கு மத்தியில் மோடி சென்ற பிறகு பேசிய வானதி சீனிவாசன் இது காசு கொடுத்து குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் சேர்த்த கூட்டமல்ல என பேசிய போது கலைந்து சென்ற கூட்டம் ஒரு நொடி நின்று மேடையை திரும்பிப்பார்த்து அதிர்ச்சி கலந்த சிரிப்புடன் சென்றது.
Post a Comment