அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த வாட்ஸ்அப் நிறுவனம்


நவீன உலகில் தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சிகள், ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது சமூக வலைத்தளங்களே இதற்கு அதிகம் பயன்படுத்துகின்றது.
இந்நிலையில் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாட்ஸ்அப் தளத்தை சில அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் தகவல் தொடர்பு தலைவரான கார்ல் வோக் கூறியதாவது:
வாட்ஸ்அப் சேவையை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த சில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. எத்தகைய காரணத்தை கொண்டும் வாட்ஸ்அப்-ஐ தவறாக பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எச்சரிக்கையை மீறி தவறாக பயன்படுத்தினால் வாட்ஸ்அப் சேவை தடை செய்யப்படும். மீறி இந்த செயல்களில் ஈடுபடுவோரைகளை தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget