30ஆயிரம் கோடி கடனை வெறும் 5000 கோடி கட்டி அடைப்பது எப்படி?


30ஆயிரம் கோடி கடனை  வெறும்  5000 கோடி கட்டி அடைப்பது எப்படி?

'Alok textiles' ன்ற கம்பெனிக்கு பதினைஞ்சி பேங்க் சேந்து 30 ஆயிரம் கோடி ரூபா கடன் கொடுக்குறாங்க.

30 ஆயிரம் கோடி ரூபா கடன வாங்கிட்டு  கம்பெனிக்காரனுங்க வட்டியும் கட்டாம,அசலும் கட்டாம ஏமாத்திட்டு இருக்கானுங்க.
இதனால செம காண்டான நம்ம பேங்க் ஆட்கள்,டேய் வாங்குன கடனுக்கு வட்டி கட்டாம ஏமாத்துறீங்களே நீங்கெல்லாம் உருப்படுவீங்களடானு கேட்டதுக்கு,தோ! பாருங்க சார் கம்பெனி நட்டமாயிடுச்சி, வட்டியெல்லாம் கட்ட முடியாது ,உன்னால முடிஞ்சது பாத்துக்கோனு அசிங்கப்படுத்தி அனுப்பிட்றானுங்க.

ரொம்ப டென்சன் ஆன நம்ம பேங்க்காரங்க,நேரா NCLT ன்ற தீர்ப்பாயத்துக்கிட்ட போயி கடன வாங்கிட்டு திருப்பி கட்டாம ஏமாத்தினு இருக்கானுங்கயானு பிராது கொடுக்குறாங்க...

அந்த பிராத பாத்துட்டு செம டென்சனான NCLT,அந்த கம்பெனிக்காரனுங்கள கூப்பிட்டு,யோவ் கடனை கட்ட முடியுமா முடியாதானு கேக்குறாங்க, அவனுங்க ஏய் ச்சீ ப்பே கட்ட முடியாதுனு சொல்லி NCLT யையும் அசிங்கப்படுத்துறானுங்க.

வேற‌ வழி இல்லாம NCLT யும்,அதான் இவ்வளோ அடக்கமா நட்டமாயிடுச்சி, கடன கட்டமுடியாதுனு சொல்றானேப்பா,அவன் என்ன வச்சிக்கிட்டா இல்லனு சொல்றான்.நம்ம வேணும்னா இந்த கம்பெனிய திவால்னு அறிவிச்சு ஏலம் விடலாம்,ஏலத்துல வர்ற காச வச்சி கடன கட்டிடலாம்னு ஒரு மாஸ்டர் ப்ளான் போட்றாங்க.

அதே மாதிரி மறுநாள் ஏலத்த நடத்துறாங்க,அந்த ஏலத்துல இந்தியாவோட பரம ஏழை அம்பானி அந்த 30 ஆயிரம் கோடி‌ கடன,5000 கோடிக்கு வாங்கிக்கிறேன்னு பெருந்தன்மையா சொல்றாரு.

NCLT ஆபிசர் எல்லா பேங்க் ஆட்களையும் கூப்ட்டு ,என்னப்பா 5000 கோடிக்கு கொடுத்துடலாமானு ஓட்டெடுப்பு நடத்துறாரு.ஓட்டுப்பதிவுல குறைஞ்சது 75 சதவீதம் ஆதரவு இருந்தாதான் ஜெயிக்க முடியும்.ஆனா கிடைக்கிறது என்னமோ 72 சதவீத ஆதரவுதான்.அதானால அம்பானி வெறும் கையோட வீட்டுக்கு போய்ட்றாரு.

வீட்டுக்கு போன நம்ம பரம ஏழை, நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுனு கத்திக்கிட்டே நம்ம ஏழைத்தாயோட மகனுக்கு கால் பண்ணி,நீதி செத்துப்போச்சி,நியாயம் புதைஞ்சி போச்சினு அழுவுறாரு.

இதக்கேட்டு இரத்தக்கண்ணீர் வடிச்ச நம்ம ஏழைத்தாயின் மகன்,உடனே...அந்த NCLT ஆபிசர்க்கு ஃபோன் பண்ணி,யோவ் 75 சதவீத ஆதரவெல்லாம் தேவையில்லை 66 சதவீதமே போதும்னு ரூல்ஸ மாத்துயானு  சொல்லி கோவமா சொல்றாரு.

மறுநாள் நம்ம பரம ஏழை அம்பானி NCLT ஆபிசர் கிட்ட போயி,அதான் 66 சதவீதம்னு மாத்தியாச்சுல,குடுயா கம்பெனியனு 5000 கோடிக்கு அந்தக்கம்பெனிய வாங்கிட்றாரு.

5000 கோடிய பதினஞ்சு பேங்க்கும் சண்ட போடாம பிரிச்சி எடுத்துக்கோங்க...25000 கோடிய ரூபாய காந்தி கணக்குல எழுதுங்கனு நம்ம NCLT ஆபிசர் கடைய சாத்திட்றாரு.

இதுல ட்விஸ்ட் என்னனா ...30ஆயிரம் கோடி கடன் வாங்குனவனும் ஒரே ஆள்தான்,5000 கோடி கொடுத்து அந்த கடன அடைச்சவனும் ஒரே ஆள்தான்.

ஆகமொத்தம் 25000 கோடி மக்கள் பணம் ...அவுட்டு.
#bjp_fails
#save_public_money

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget