மகாத்மா காந்தியடியை கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி RSSயை சேர்ந்த நாதுராம் கோட்சே என்பவர் சுட்டுக் கொன்றார். இதனால் ஆண்டுதோறும் ஜனவரி 30-ஆம் நாள் மகாத்மா காந்தியின் நினைவு நாளாகும்.
அன்று காந்தியை கோட்சே துப்பாக்கியால் சட்டது போலவே சம்பவம் உத்தரப்பிரதேசம் அலிகார் இந்து மகா சபை அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அப்போது அந்த அமைப்பு தலைவர்களில் ஒருவரான பூஜா சகுண் பாண்டே காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டார். மேலும் காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதன் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி எதிர்ப்பை கிளப்பியது.
இதையடுத்து காந்தியின் உருவபொம்மையை சுட்ட 13 பேர் மீது அலிகார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்து மகா சபையை சேர்ந்த பூஜா பாண்டே, கணவர் அசோக் பாண்டேவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அன்று காந்தியை கோட்சே துப்பாக்கியால் சட்டது போலவே சம்பவம் உத்தரப்பிரதேசம் அலிகார் இந்து மகா சபை அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அப்போது அந்த அமைப்பு தலைவர்களில் ஒருவரான பூஜா சகுண் பாண்டே காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டார். மேலும் காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதன் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி எதிர்ப்பை கிளப்பியது.
இதையடுத்து காந்தியின் உருவபொம்மையை சுட்ட 13 பேர் மீது அலிகார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்து மகா சபையை சேர்ந்த பூஜா பாண்டே, கணவர் அசோக் பாண்டேவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Post a Comment