வேலூர் அருகே உள்ள ஆம்பூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: பணத்துக்காக இணைந்துள்ள கூட்டணிதான் அதிமுக - பாமக கூட்டணி. மக்களின் நலனுக்காக இல்லை, பணத்துக்காக சேர்துள்ள கூட்டணி. ஜெயலிலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வத்தை விமர்சித்தவர் ராமதாஸ். அதிமுகவின் கதை என்ற பெயரில் அரசை விமர்சித்து புத்தகம் வெளியிட்ட ராமதாஸ் அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளார். 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமல்லாமல் வேறு எதோகூட இதன் பின்னணியில் உள்ளது.
மேலும் மக்களை பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக கடுமையாக விமர்சனம் செய்தார் மு.க.ஸ்டாலின்.
மேலும் மக்களை பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக கடுமையாக விமர்சனம் செய்தார் மு.க.ஸ்டாலின்.
Post a Comment