பிளாஸ்டிக் தடையை மீறினால் இவ்வளவு அபராதமா..!


அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதற்கான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 
அதில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் சிறு வியாபாரிகளுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் மளிகை கடை, மருந்து கடைகள் போன்ற கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் ரூ.1000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் உற்பத்தி, கொள்முதல், சேமித்தல், விற்பனை செய்யவது போன்ற நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் முதலாவது முறையாக ரூ. 25 ஆயிரமும், இரண்டாவது முறையாக ரூ. 50 ஆயிரமும், மூன்றாவது முறையாக ரூ. 1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். மேலும் 3 முறை அபராதம் விதித்த பிறகும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget