தேவேந்திர குல வேளாளர் சமூகம் தங்களை பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்க கோரிக்கை விடுத்ததாக மதுரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இந்த நிலையில், அவ்வாறு எந்த கோரிக்கையும் வரவில்லை என சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது.
மதுரையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். இந்த கோரிக்கையை நிறைவேற்ற SC/ST ஆணையம் மற்றும் தமிழக அரசு மூலம் தான் பரிந்துரை செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், மக்களவையில் கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.பி குமாரி ஷோபா எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜார் மக்களவையில் அறிக்கை சமர்பித்துள்ளார். அதில், கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் மோடி கூறியது போன்ற எந்த கோரிக்கையும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.
Post a Comment