பிரபல ஜவுளி நிறுவனங்களான தி.நகர், பாடியில் உள்ள தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ், ஜி.எஸ்.ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி குழுமம் ஆகிய 4 நிறுவனங்களுக்கு சொந்தமான 74 இடங்களில் வருமான வரித்துறை ஜனவரி மாதம் 29ம் தேதி சோதனை தொடங்கியது. கடந்த 6 நாட்களாக நடத்திய இந்த சோதனை தற்போது முடிவடைந்துள்ளது.
மேலும் அந்த 4 நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.25 கோடி பணம், 12 கிலோ தங்கம், 626 காரட் வைரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Post a Comment