லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் கோடி கணக்கில் வரை வரி ஏய்ப்பு


பிரபல ஜவுளி நிறுவனங்களான தி.நகர், பாடியில் உள்ள தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ், ஜி.எஸ்.ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி குழுமம் ஆகிய 4 நிறுவனங்களுக்கு சொந்தமான 74 இடங்களில் வருமான வரித்துறை ஜனவரி மாதம் 29ம் தேதி சோதனை தொடங்கியது. கடந்த 6  நாட்களாக நடத்திய இந்த சோதனை தற்போது முடிவடைந்துள்ளது.
இதையடுத்து இன்று வருமான வரித்துறையினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜனவரி 29ம் தேதி முதல் 3 நாட்கள் சென்னையில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவைகள் நேற்று கணக்கீடு செய்யப்பட்டது. மேலும் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த 4 நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.25 கோடி பணம், 12 கிலோ தங்கம், 626 காரட் வைரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget