அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ஜீரோ தான்- டி.டி.வி. தினகரன்


தமிழகத்தில் அதிமுக அணியில் பாமக, பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்றக் கட்சியை ஆரம்பித்துள்ள சசிகலா மற்றும் டிடிவி தினகரன், எந்த கட்சியோடும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் தனிமையாக போட்டியிடுவார்கள் என தெரிகிறது.

டிடிவி தினகரன், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அதிமுக உடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் டெபாசிட்டை இழப்பார்கள். மேலும் நாடாளுமன்ற தேர்தலும், 20 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் வரவுள்ளது.

இந்த தேர்தலில் எட்டு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற முடியாவிட்டால் எடப்பாடியின் ஆட்சி முடிவுக்கு வரும். இதற்கு பயந்து அவர்கள் கூட்டணி அமைத்து அவர்களின் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள போராடி வருகின்றனர். 

எந்த கட்சியெல்லால் அவர்களோடு கூட்டணி அமைக்க போகிறதோ அனைவரும் ஜீரோவாக போகின்றனர். கூட்டணியில் இணையப் போகும் அத்தனைக் கட்சிகளும் தேர்தலில் டெபாசிட்டை இழக்கப் போகின்றனர் எனக் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget