காங்கிரஸும், பாஜகவும், மார்க்சிஸ்டும் வேறு இல்லை என்பதை சபரிமலை, 10% இட ஒதுக்கீடு, சாரதா சிட் பண்ட் வழக்கு போன்றவை நமக்கு எடுத்துக்காட்டின.
அதே போல் அதிமுகவும், திமுகவும் வேறில்லை என்பதை திருபுவனம் ராமலிங்கம் கொலை நமக்கு எடுத்துக்காட்டி விட்டது.
கருணாநிதியை போல் ஸ்டாலின் இல்லை என்பதை அவரே மணிக்கு ஒருமுறை காட்டிக்கொண்டிருக்கிறார். வாய் புளித்ததா? மாங்காய் புளித்ததா? என தெரியவில்லை. ஆனால், ஸ்டாலினின் ஒவ்வொரு கருத்துக்களும் சளித்துக் கொண்டிருக்கின்றன.
ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான 5 பேருக்கும் தொடர்பில்லை என அவரது மகன் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. 5 பேரும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது. ஆனால், ஸ்டாலின் தனது டுவிட்டரில் கொலையாளிகள் 5 பேர் கைது என குறிப்பிட்டுள்ளார். கூடவே மதநல்லிணம் என்ற மசாலாவையும் அரைக்கிறார்.
கொலை நடந்த உடனே பாஜகவினர் திமுக, திராவிட கட்சிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என சாடினர். இவர்கள் அழுத்தத்திற்கு எல்லாம் ஒரு எதிர்க்கட்சியின் தலைவர் ஆளாகுவாரா? என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அழுத்தத்திற்கு ஆளாகி ஒரு பொதுவான கருத்தை வெளிப்படுத்தினால் சரி எனலாம். ஆனால் எதிர்க்கட்சி தலைவரே நொடிப்பொழுதில் நீதிபதியாக மாறி கொலையாளிகள் கைதான 5 பேர் தான் என்கிறார்.
ஒட்டுமொத்தமாக இந்த அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில் கொள்கை கோட்பாடுகளை தூக்கி எரிந்துவிட்டு சந்தர்ப்பவாத வாக்கு அரசியலுக்குள் குதித்து விடுகின்றனர் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
அதே போல் அதிமுகவும், திமுகவும் வேறில்லை என்பதை திருபுவனம் ராமலிங்கம் கொலை நமக்கு எடுத்துக்காட்டி விட்டது.
கருணாநிதியை போல் ஸ்டாலின் இல்லை என்பதை அவரே மணிக்கு ஒருமுறை காட்டிக்கொண்டிருக்கிறார். வாய் புளித்ததா? மாங்காய் புளித்ததா? என தெரியவில்லை. ஆனால், ஸ்டாலினின் ஒவ்வொரு கருத்துக்களும் சளித்துக் கொண்டிருக்கின்றன.
ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான 5 பேருக்கும் தொடர்பில்லை என அவரது மகன் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. 5 பேரும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது. ஆனால், ஸ்டாலின் தனது டுவிட்டரில் கொலையாளிகள் 5 பேர் கைது என குறிப்பிட்டுள்ளார். கூடவே மதநல்லிணம் என்ற மசாலாவையும் அரைக்கிறார்.
கொலை நடந்த உடனே பாஜகவினர் திமுக, திராவிட கட்சிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என சாடினர். இவர்கள் அழுத்தத்திற்கு எல்லாம் ஒரு எதிர்க்கட்சியின் தலைவர் ஆளாகுவாரா? என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அழுத்தத்திற்கு ஆளாகி ஒரு பொதுவான கருத்தை வெளிப்படுத்தினால் சரி எனலாம். ஆனால் எதிர்க்கட்சி தலைவரே நொடிப்பொழுதில் நீதிபதியாக மாறி கொலையாளிகள் கைதான 5 பேர் தான் என்கிறார்.
ஒட்டுமொத்தமாக இந்த அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில் கொள்கை கோட்பாடுகளை தூக்கி எரிந்துவிட்டு சந்தர்ப்பவாத வாக்கு அரசியலுக்குள் குதித்து விடுகின்றனர் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
Post a Comment