பிரதமர் மோடி ரெடியா? சவால் விட்ட ராகுல் காந்தி..!


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிறுபான்மையினர் பிரிவினருக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை ஒரே மேடையில் விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளார். RSS அமைப்பினர் நாட்டில் உள்ள அனைத்து இயக்கங்களிலும் அவர்களின் ஆதிக்கத்தை செலுத்துகின்றனர். RSS அமைப்பின் முகமாக பிரதமர் நரேந்திர மோடி இருந்து வருகிறார்.
இந்தியாவில் அனைத்து மதங்கள் மற்றும் மொழிகள் மதிக்கப்பட வேண்டும். மேலும் பிற மதம் சேர்ந்தவர்கள் சமமாக நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டு பேசினார். தேசத்தை விட பாஜக தான் பெரியது என எண்ணி கொண்டுருக்கிறார்கள். இன்னும் 3 மாதங்களில் தேசம் தான் உயர்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். மோடி என்கிற இமேஜ் முடிவுக்கு வந்து விட்டது. 
தேசிய பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் ஒரே மேடையில் வெறும் 10 நிமிடங்கள் விவாதிக்க தயாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget