டெல்லி கரோல்பாக் பகுதியில் அர்பிட் பேலஸில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 மாடிகளை கொண்ட இந்த அர்பிட் பேலஸ் ஓட்டலில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட தொடங்கியது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு படையினர், மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்படையுனர் மற்றும் மீட்புப்படையினர் தீயை அணைத்து, மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் குழந்தை உட்பட 17 பேர் பலியாகியுள்ளார்கள். காயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும் கோவையை சேர்ந்த நந்தகுமார் மற்றும் அரவிந்த சிவகுமாரன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment