இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவா் போட்டி இன்று நடைபெற்றது.
இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடங்கிய இந்தியா 18.5 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்காக அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்கள் எடுத்தார். க்ருனால் பாண்டியா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.
மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி, பிப்ரவரி 10 அன்றுமதியம் 12.30 மணிக்கு ஹாமில்டனில் தொடங்கும். இறுதிப்போட்டியான அதில் தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Post a Comment