கோவையில் சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானை கும்கி யானையாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தள்ளார். கோவையில் நடைபெற்ற, மேற்கு தொடர்ச்சி மலை சூழலியல் திருவிழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னத்தம்பி யானைக்கு சோழப்பயிர்களின் ருசி பிடித்து விட்டதால் அது காட்டுக்குள் செல்லாமல் ஊருக்குள் சுற்றித்திரிவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். தவிர்க்க முடியாத சூழலில் யானைகளை பிடிக்கும் போது அவற்றின் தந்தம் உடைவதும், உடலில் காயங்கள் ஏற்படுவதும் பிரச்சனையில்லை என அவர் தெரிவித்தார்.
Post a Comment