முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் அதிகமாக புகழ் வாய்ந்த அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் இவர், மீன்வளத்துறை சார்பான புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் விலாங்கு மீன் போல நழுவி வருகிறார் என அதிமுகவை சேர்ந்த இன்ப துரை புகார் ஒன்றைக் கூறியிருந்தார்.
இன்று அதுபற்றி ஜெயக்குமாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் 'நான் விலாங்கு மீன் அல்ல. டால்பின் மீன்.. நான் ஏன்றுமே மனிதர்களுக்கு உதவும் டால்பின் மீன் போல இருப்பேன்' என பதிலைக் கூறினார். இதை கேட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சிரித்துவிட்டு சென்றனர்.
இன்று அதுபற்றி ஜெயக்குமாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் 'நான் விலாங்கு மீன் அல்ல. டால்பின் மீன்.. நான் ஏன்றுமே மனிதர்களுக்கு உதவும் டால்பின் மீன் போல இருப்பேன்' என பதிலைக் கூறினார். இதை கேட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சிரித்துவிட்டு சென்றனர்.
இவர் இவ்வாறு நகைச்சுவையாகப் பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Post a Comment