இந்தோனேசியாவில் மென்ட்டவாய் தீவு அருகே இன்று மாலை 3 மணி அளவில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மென்ட்டவாய் தீவிற்கு 117 கிலோ மீட்டர் தென் கிழக்கே கடலுக்கு அடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவிலும், அதன் பிறகு சுமார் 25 நிமிடங்களுக்கு பிறகு ஏற்பட்ட நிலநடுக்கம் 6.0 ரிக்டராகவும் பதிவாகு உள்ளது.
மென்ட்டவாய் தீவை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டதால் மக்களுக்கு அச்சம் எற்பட்டு தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தெருக்களில் அடைந்துள்ளனர்.
Post a Comment